#shaktiBhadhao

shaktiBhadhao

உணவே மருந்து

வணக்கம்,
குழந்தைகள், பெரியவர்களுக்கு இந்த கொரோன காலத்தில் மிகவும் ஊட்டச்சது மிகுந்த உணவுகளை உண்பது அவசியம்.

காலை உணவில் முளைகட்டிய பயிறு, சத்து மாவு கலந்த பால், சத்து மிகுந்த ஏதேனும் ஒரு காலை உணவு.

உணவே மருந்து

காலையில் 11 மணிக்கு நல்ல வைட்டமின்- சி அதிகம் உள்ள பழம் ( கொய்யா, ஆரஞ்சு, நெல்லிக்காய், பப்பாளி, மாதுளை, எழுமிச்சை ) கொண்டு ஜூஸ் தயார் செய்து பருகலாம்.

மதிய சாப்பாட்டிற்கு சம்பா அரிசி சோறு சமைக்கலாம்.

இஞ்சி- நெல்லிக்காய் துவையல் சேர்த்து கொள்ளலாம்.

மிளகு ரசம் சளி இருமலுக்கு மிகவும் நல்லது. இந்த கொரோன காலத்துக்கு ஏற்றது.

மாலை வேளையில் னு சக்தி சத்து மாவு உருண்டை பிடித்து குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு கொடுக்கலாம்.

இரவு வேளையில் சூடான சம்பா அரிசி காஞ்சி வைத்து சாப்பிடலாம்

எல்லா சமையல் செய்யும் போது கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆடுகளை சுத்தமா வைத்திருப்பதும் அவசியம்.

நீங்கள் செய்யும் உணவுகளில் மஞ்சள், இஞ்சி, கருவேப்பிலை, மிளகு தினமும் சேர்க்க மறக்காதீர்கள்.

Follow me on instagram

Leave a comment